Friday, July 25, 2014

உள்ளம் கேட்குமே 'more'!

'வேலை தெரிஞ்சவன்டா, வேலை இல்லாதவன்டா...' என்னடா இவன் பாட்ட மாத்திப் பாடுறேன்னு நினைக்கிறீங்களா? நிலைமைக்குத் தக்கவாறுதான பாட முடியும். இப்படித்தாங்க சில நேரங்களில் நமது/எனது நிலைமை இருக்கிறது. கணிணித் துறையில் மட்டுமல்ல, அநேகமாக எல்லாத் துறைகளிலும், தொழிகளிலும்கூட சில நாட்களுக்கு வேலை இல்லாமல் இருக்கும்.

நாம அடிச்ச 'code' இவ்வளவு நல்லாவா வேலை செய்யுதுன்னு, சில நேரங்களில் நமக்கே சந்தேகம் வரும் அளவிற்கு, Client-கிட்ட இருந்து ஒரு mail-ம் வராத நேரங்களில் எனது/நமது பொழுது போக்குகளைப் பற்றிய பதிவு இது.

நானும் எவ்வளவு நேரம்தான் வலைதளத்திலேயே சிக்கிக் கொண்டிருக்க முடியும், முக வலைதளத்தில், புதிய பதிவுகளை எதிர் நோக்கி, Refresh பட்டன் அழுத்தி,அழுத்தி அந்த பட்டனே சோர்ந்து போய்விடும் அளவிற்கு பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. சில நேரங்களில் பயங்கர Bore அடிக்கும், சில நேரங்களில் Bore பயங்கரமா அடிக்கும்.

ஆனா இந்த நேரத்துல, "உங்களுடைய சேவை எங்களுக்குத் தேவை" என்று யாராவது வந்து கேட்டுவிட்டால் போதும். "வாயா மகராசா, உன்னைதான் தேடிக்கிட்டு இருந்தேன், இதோ வந்திட்டேன்...' என்று கிளம்பிவிட வேண்டியதுதான்.

Mail-க்கு வேலையில்லாதபோது, சிறிது நேரத்தை பாட்டிற்கும் கொடுப்பது எனது வழக்கம்.

நான் இப்படி நேரத்தினைப் போக்குவதற்காக காதில் Head phone மாட்டிக் கொண்டு பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், அருகிலிருக்கும் மற்றொரு Team-இல் இருப்பவரிடம் பலர் கூடுவார்கள். அதிலிருந்தே தெரிந்து போகும், எதோ பிரச்சனை என்று. அவருக்கு வருவது, கொஞ்சம் இங்கு வந்தால் என்ன என்று மனம் இலேசாக அடித்துக் கொள்ளும். அவர்கள் ஒரே பரபரப்பாக இருக்கும் அந்த நேரத்தில் நான் மட்டும், ஜாலியாக, பாடல் கேட்டுக் கொண்டும், ஏதோ ஒரு வலைதளத்தைப் பார்த்துக் கொண்டும் இருப்பதைக் கவனிப்பார்கள். அப்பொழுது அவர்கள் மன நிலை எப்படி இருக்கும் தெரியுமா? நாட்டாமை படத்தில் கவுண்டமணி அவர்கள் கேட்பது போலத்தான் இருக்கும்

"யாருடா இவன், இவ்வளவு அமளி துமுளி நடக்குது, இங்க உட்கார்ந்து இப்படி ஜாலியா பாட்டு கேட்டுட்டு இருக்கான்னு"  நினைத்துக் கொள்(ல்)வார்கள்.

"சத்திய சோதனை. அது ஒன்னும் இல்லீங்க, எங்க Manager-தான், எங்க Project-க்கு 'AD Support' இல்லைன்னு சொல்லிவிடக் கூடாதுன்னு, எனக்கு பில்லிங்க் கொடுத்து இந்த Project-ல வச்சிருக்காங்கன்னு" அவங்ககிட்ட எப்படிச் சொல்வேன்.

இப்படிப்பட்ட நிலைமைகளில், கவுண்டமனி அவர்கள் ஒரு படத்தில், கலயாண வீட்டில், "டேய் யாராவது சண்டைக்கு வாங்கடா" அப்படிங்கிற மாதிரியான நிலைமையில், எனக்கு' "யாராவது ஒரு defect சொல்லுங்க, யாராவது ஒரு Mail அனுப்புங்க' அப்படின்னு உள்ளம் கேட்குமே more.