Tuesday, March 13, 2012

தொழில் நுட்பம்

அனபர்களுக்கு வணக்கம்,

சமீபத்தில் "அம்புலி" படம் பார்த்தேன். தொழில் நுட்பத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. அருமையான 3D பதிவுகள். அந்தப் படத்தின்போது இடைவேளையின்போது "கர்ணன்" படத்தின் "Trailer" ஒளிபரப்பினார்கள். அப்போது எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த எண்ணத்தை எண்ணிப்பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது... இப்படிப்பட்ட தொழில் நுட்பங்கள் இருக்கும் போது நாம் ஏன் நம்முடைய புராண இதிகாசங்களைப் படமாக மீண்டும் உருவாக்கக் கூடாது?




"Horry Potter" போன்ற கர்ப்பனைக் கதாப்பாத்திங்கள் கொண்ட படங்களை நாம் விரும்பிப் பார்க்கும்போது, நவீன தொழில் நுட்பம் கொண்டு நம் இதிகசங்களை "Troy" போலவும், "Harry Potter" போலவும் நாம் ஏன் எடுக்கக் கூடாது?

இன்னும் நாம் அந்த முயற்சியினை எடுக்காவிட்டால் - வெளி நாட்டவர் எடுத்து நாம் பார்க்க நேரிடும். அப்போது, அதில் சில தவறாகவும் படலாம். அப்போது அந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கூட நடத்த நேரிடலாம். நமக்குள் உள்ள நல்லவற்றை வைத்துக் கொண்டு இந்த உலகை ஏன் நம்மால் திரும்பிப் பார்க்க வைக்க இயலாது?