Thursday, July 17, 2014

ஆடி ஒன்னு

...என் தாத்தாவின் நினைவாக இந்தப் பதிவு...



இன்னாரின் பேரன் என்று,
உன் பெயரை முன்னிறுத்தியே,
ஊரார்க்கு அடையாளப்படுத்தப்பட்டோம்...

நம் பரம்பரையின் - கோவணம்
தாங்கிய கடைசி வாரிசு நீதான்,
கடைசியாய் ஏர் கொண்டுழுதவனும் நீதான்...

உன் ஆயுள் முடியும் முன்னே,
எம்மை ஆயுள் கைதியாக்கி,
மாலையும் கழுத்துமாய் பார்க்க தீராத
ஆசை கொண்டாய் - உனக்கென்ன
அவசரமோ, மாலையினை
உன் உடல்மேல் சூட ஆசைகொண்டு,
உறங்கச் சென்றாயோ
உறவுகள் விட்டு,
உடல் விட்டு,
மண் தொட்டு விண் தொட - எம்
கால்கட்டுப் பார்க்காமல்,
கால்கட்டிச் சென்றாயே...

ஆண்டு ரெண்டு
ஆகிப்போச்சு,
ஆடி ஒன்னில் ,
ஆக்கி வைத்த
ஆட்டுக் கறி நீ தின்னு
ஆழ்ந்த உறக்கம் சென்று,
ஆடியில் ஆடித்தான்போனோம்,
ஆனபோதும் மனம்
ஆர்ப்பரிக்கிறது உனை மீண்டும் காண
ஆசை கொண்டு...

No comments: