Sunday, October 17, 2010

கொள்வதால் கொல்கிறேன்

அள்ளி அணைக்க
ஆசையோடு
நானிருக்க,
நாணம் கொண்டு
நீ
நின்றால்
நான் என்ன செய்ய...?

உன்னை மட்டுமே அணைக்கத்
தெரிந்த எனக்கு,
உன் நாணமும்
அணைக்கத் தெரியுமடி...

முள்ளை முள்ளால் எடுப்பது போல்,
நான் உன்னை
அணைக்கும்
அணைப்பில் அந்த
நாணம் கூட
நாணம் கொண்டோடுமடி...

நாணம்-கொள்ள நீ தயாரெனில்,
நாணம்-கொல்ல நானும் தயார்...

அன்பே வா...
கொள்ளு(ல்லு)ம்
விளையாட்டை விளையாட...!!!