Wednesday, November 9, 2016

புதுவன புகுதல்


 ஊழல் செய்த பணத்தின் மதிப்பு மட்டுமே செல்லாது போகிறது. ஊழல் செல்லாது போகவில்லை. இனி புதிதாய் செய்வோம், இனி செய்யும் ஊழலுக்கும்,பதுக்கும் பணத்திற்கும் கால மதிப்பானது அதிகம் என்பதை மனதில் வைத்து ஊழலும்,பதுக்கலும் இன்னும் சற்று தைரியமாக வலுப்பெறலாம். ஆக, இதை எவ்வாறு தடுக்கப் போகிறோம் என்றுதான் எண்ணம் ஓடுகிறது. பழையன கழிதலுக்கு வழி வகுத்த இவ்வரசு - புதுவென பழையனவே புகாதிருக்க வழி செய்திட்டால் நலம். இனி செய்யப்படும் ஊழலுக்கும்,பதுக்கலுக்கும் நாமும் ஓர் சாட்சியாய்/காரணமாய் இருக்கப் போகிறோம் என்பதை மனதில் வைத்து நாமும் நம்மால் இயன்ற முயற்சியினை/ஆதரவை வழங்க வேண்டியது அவசியம். சில நாள் அசவுகரியங்களை நமக்கு கொடுத்து, பல வருட பதுக்கலுக்கு மரண அடி கொடுத்த இவ்வரசுக்கு என்  வாழ்த்துக்கள். எனது தங்கையின் திருமணத்திற்காக ஊருக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன் - செல்லாக் காசுக்களுடன்
- அன்பன் வினோத்.