Saturday, July 26, 2008

நிழல்

ஒளி
ஒழி(ளி)ந்து போயின் உடன்
ஒழி(ளி)பவன்
நீ...
நிழல்!!!

Wednesday, July 23, 2008

நினைவாணிகள் -- பாகம் ஒன்று

படிக்கும்போது படித்தவைகள் பசுமரத்தாணி போலப் பதிய வேண்டும் என்று கூறுவார்கள். எனது மனதிலும் இத்தகைய ஆணிகள் நிறைய உண்டு.
இன்று படர்ந்து மரமாக நிற்கும் என்னுள் பதிந்துள்ள நினைவாணிகள் எத்தனை என்பதை என்னாள் முடிந்தவரை கணக்கிட்டு நினைவு கூர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நினைவாணிகள் பாகம் ஒன்று

இதோ எனது முதல் பதிவாக நான் பிறந்த மண் பற்றி. நான் பிறந்தது தமிழகத்தின் வாழ்வாதாரமான கிராமம். கவிதையினைப் படித்து வளர்ந்தோர் மத்தியில் கவிதையினைப் பார்த்து வளர்ந்தவர்களில் நானும்
ஒருவன். எனது கிராமத்தைத்தான் கவிதை என்று கூறுகிறேன்.

ஒரு தீவு என்று குறிப்பிடும்போது நான்கு பக்கஙளும் நீரால் சூழப்பட்டது என்றும்; ஒரு தீபகற்பத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மூன்று பக்கம் கடலாலும்,ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டது என்றும் கூறுவோம். அவ்வகையில் எனது கிராமத்தைப் பற்றிக் குறிப்பிட வேன்டுமென்றால்
நான்கு பக்கம் வறட்சியால் சூழப்பட்ட ஒரு பசுமையான கிராமம்.

பஞ்சம் தலை விரித்து ஆடும் என்று அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்,அதை கண்ணால் கண்டவன் நான். புரியவில்லையா?
எனது கிராமம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம்...
"இராமநாதபுரம்" என்றதும் அனைவருக்கும் கண்டிப்பாக நினைவுப்படவேண்டியது அதன் வறட்சியே; அந்த வகையில் எனது கிராமமும் ஒரு விதிவிலக்கு அல்ல. நான்கு பக்கம் பசுமை என்று நான் குறிப்பிடக் காரணம் முள் மரங்கள்(கருவேல முள் மரம்) எனது கிராமத்தில் நிறைய
உண்டு, அது பார்ப்பதற்கு தலை விரித்து ஆடுவது போல இருக்கும். அந்த முள் மரத்தின் தன்மை என்னவென்றால் நிலத்தடி நீர் மட்டத்தை குறைத்து விடும். எந்த ஒரு தீமைக்குள்ளும் ஓர் நன்மை இருப்பது போல இதற்குள்ளும் ஓர் நன்மை உன்டு. எங்கள் உடம்பில் கறி(சதை) நன்றாக வளர்ச்சியுற்று இருக்க இந்த விறகுக் கரியே காரணம். ஆம் விவசாயம் ஓய்வெடுக்கும் வேளையில் எங்கள் கிராமத்தில் பிரதான தொழில் கருவ முள் மரங்களை வெட்டி விறகு தயாரிப்பதே,இன்றளவும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அடுத்ததாக ஆலமரம்,
எமது கிராமம் எவ்வளவு பழமையானது என்பது இந்த ஆலமரதைக் கண்டால் போதும். எங்கள் கிராமத்தின் கல் வெட்டாய் இருப்பது இந்த ஆலமரம். சின்னஞ் சிறு பொடிசு முதற்கொன்டு மரம் ஏறி கூழாங் கற்களைக் கொண்டு அழகாக செதுக்கி வைப்பர் அவர்கள் பெயரை,அதில் நானும் எனது பெயரைப் பதித்ததுண்டு. படர்ந்து விரிந்த இது எங்கள் ஊரின் கண்மாய்
கரையின் எல்லையாகவே அமைந்து விட்டது. நீச்சல் அடிப்போர் எல்லோருக்கும் இக்கரையில் இருந்து அக்கரையில் உள்ள
இந்த மரத்தை அடைவதே குறிக்கோளாக இருக்கும்,போட்டி கூட உண்டு. அக்கரைக்கு சென்ற பின்பு ஆல மரத்தில் ஏறிச் சென்று,கண்மாய்க்கு மேலே தெரியும்படி உள்ள கொப்புகளை தேடிச் சென்று அதில்

இருந்து கண்மாயில் குதித்திடும் சுகம் யாருக்குக் கிடைக்கும். பின்னர் களி மண்ணைப் பூசிக் கொண்டு குளியல் இடுவது என எல்லா வால் தனங்களும் அரங்கேரும்.


அடுத்ததாக சுடுகாடு,
இந்த இடம் கூட பஞ்சத்தில் அடிபட்டது போலத்தான் இருக்கும். ( இடத்தின் அளவினைப் பற்றி) பொழுது போகாத தினங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் நாஙள் சுற்றித் திரிந்த ஒரு சுற்றுலாத்
தளம். அங்கு கிடைக்கும் கேந்திப் பூக்களை(இளஞ் சிவப்பு வண்ணதில்,பச்சை காம்புடன் இருக்கும்) எடுத்து வந்து ரோட்டில் வைது நசுக்கி விளையாண்டதுண்டு,மண்டை ஓடுகள் இருந்தால் வழக்கம் போல எத்தி
விளையாடியதுண்டு...

அடுத்தாக மாட்டு வண்டிகள்,
எனக்கு பத்து வயது இருக்கும் போது நிறைய வண்டிகள் இருந்தன, ஆனால் தற்போது சொற்ப அளவில் மட்டுமே உள்ளன. மாட்டு வண்டியில் செல்வதை விட, அதை நிருத்தி வைத்த பிறகு அதன் முகப்பில் இரு
பக்கமும் உட்கார்ந்து கொண்டு விளையடுவது தனி சுகம்தான்,
அதிலும் வண்டிக்கு சொந்தக்காரர் அருகில் இல்லாவிட்டால் படு குசி தான். அவர் இருந்தால் முகப்பு பழுதாகிவிடும் என்று எஙளைத் துரத்தி விடுவாரே.
அப்பொழுதெல்லாம் மாட்டிற்கும் எனக்கும் அப்படி ஒரு பிணைப்பு உண்டு,கீழே விழுந்து காயம் பட்டு விட்டால் எஙளுக்கு உடனடி மருந்து (டெட்டால்) மாட்டுக் கோமியம் அல்லது மாட்டுச் சாணம்தான்.
இப்படி விலங்கோடு விலங்காக வாழ்ந்த சுகமே தனி சுகம்தான்,இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இப்படிப் பட்ட கிராமத்திலேயே பிறக்க ஆசைப்படுகிறேன்...


---"நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகள் தொடரும்"---

--அன்பன் வினோத்

Monday, July 21, 2008

இலக்கிய சிந்தனை - பொருள் பொருந்திடா மென்பொறியாளர்கள்?

ஒரு வலை தளத்தில் நான் படித்தது.

அதன் வலை தல முகவரியும்,அதில் குறிப்பிடப்பட்டவையும்...
http://nilavunanban.blogspot.com/2008/06/blog-post_10.html
//
கணிப்பொறி வல்லுனர்கள் என்றால் வார விடுமுறையில் கூத்து கும்மாளமிட்டு திரிபவர்களாக இச்சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் அவர்களை இம்முயற்சியில் ஈடுபடுத்தி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த இதழ் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்
//

இதோ எனது உரை...

மென் பொறியாளர்களைப் பற்றி அவர்கள் குறிப்பிட்டிருந்தது ' இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது '. இந்த வார்த்தை அவர்கள் பயன்படுத்தியதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆயினும் இந்த சமூகத்தில் இருந்து மென் பொறியளர்கள் தனித்துப் பார்க்கப்பட ஆடம்பித்துவிட்டார்கள் என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது.
நானும் ஒரு மென் பொறியாளன் என்பதால் மட்டும் இதை எழுதவில்லை ஒரு தமிழன் என்பதாலும்,தமிழ் கலாச்சாரம் பற்றிய சிந்தனை எனக்குள்ளும் ஓடுவதாலும் இதை எழுதுகிறேன்.



'தமிழ் இலக்கிய சிந்தனை அவர்களுக்கும் உன்டு'...
தலை குனியச் செய்யக் கூடிய வார்த்தைகள்...


அன்பிற்குரிய பண்பாளர்களுக்கு,
உஙளைப் போலவே, தமிழ் எனும் தாயின்
விளை நிளத்தில் விளைந்த எஙகளை மட்டும் ஏன்
தனிமைப் படுத்துகிறீர்கள்?
கூத்திட்டு கும்மாளம் இடுவோர் என சாடுவது எதனால்? எங்கள் கிராமத்தில் எப்படி மண் வாசம் கமழுமோ அதைப் போல எனது நாவிலும் தமிழ் மொழி வீசும்.
இது வரை எனது வாயில் இருந்து தமிழ் மணம் வீசியது உண்டு,ஆங்கில நாற்றம் வீசியது உண்டு, ஆனால் மது,புகை துர்நாற்றம் வீசியது இல்லை.
என்னைப் போன்றோர் பலர் இருக்கையில், இப்படி சாடுவது சரியா?
இப்படிதான் வாழ வேன்டும் என்பது தமிழ் மரபு அதை இம்மியளவும் பிசகாமல் கடை பிடிப்போர் எம்முள் பலர் உன்டு.எனவே இனியும் ஓர் முறை இந்த மாதிரியான பாகு பாடு வேன்டாமே...
நாங்கள் எல்லாம் குழுமையாக(அதி சுகமாக) இருப்பதாக எண்ணுவோர் பல உண்டு...
அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது...
நாங்கள் குழுமையாக இருந்தாலும், நாங்கள் எல்லாம் ஒரு விளை நிலத்தில் மர நிழலில் வளரும் பயிர்களைப் போன்றவர்கள்...
எங்கள் வாழ்வினை தொலைத்துக் கொன்டிருக்கிறோம்,
யாம் வீணாக்கப்படுவது தெரியாமல் ( அதவது எஙளுக்கும் சில பாதிப்புகள்,கடினங்கள் உண்டு )
எனவே இனியும் ஓர் முறை இந்த மாதிரியான பாகு பாடு வேன்டாமே...



இந்த சமயத்தில் நமது வள்ளுவப் பெருந்தகையின் குறள் ஒன்றினைக் குறிப்பிட்டுச் சொல்ல் விரும்புகிறேன்

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாழ்க தமிழ்...
வளரட்டும் நல் எண்ணங்கள்...

--அன்பன் வினோத்

Saturday, July 12, 2008

வெடிக்கட்டும் கன்னி வெடி

------கனியும் கன்னியும் ஒன்று----------
கனியும் கன்னியும் ஒன்று
வெடித்த பலாக் கனி - பழுத்த கனி
வெடித்த கன்னி - பழுத்த கன்னி
---------------------------------------


தலைமுறைகள் அழிந்திடாதிருக்க
"கன்னிவெடி" - வெடித்திடாது
'கன்னி வெடி'த்திடட்டும்...

புதிய தலைமுறைகள் மலர்ந்திட
'கன்னி வெடி'த்திடட்டும்...

Saturday, July 5, 2008

தசாவாதாரம் - பிறர் பார்வையில் எனது ஓட்டம்

உலகத் தரம் வாய்ந்த தமிழ் சினிமாவை உருவாக்குவதற்கு உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் உலக நாயகன் கமலின் ' தசாவாதாரம் ' சினிமாவைப் பற்றி எனது விமர்சனம்.
என்னைப் பொருத்தவரை இது கமலின் வெற்றிப் படிக் கட்டுகளின் புதிய ஒரு படிக் கல். தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகள் என்று ஒரு கூற்றும் உண்டு. அப்படியென்றால் இதுவும் அவ்வகையில் சேர்ந்த ஒன்றுதானா? என்று வினவினாள்,எனது பதில்
அப் படிக்கட்டுகளின் அருமை உணர்ந்தவர்களுக்கேஇக் கேள்விக்கான பதில் புலப்படும்.ஒரு பத்திரிக்கையில் இப்படத்தைப் பற்றி ஒரு விமர்சனம் -
' கதை என்னும் அஸ்திவாரம் இல்லாமல் எழுப்பப்பட்டஒரு பிரம்மாண்ட மாளிகை' . அப்படிப் பார்த்தால் நான்கு கோடி விந்துவின் சிறு துளியின் பிரம்மாண்டம் நமது 100 வருட வாழ்க்கை. இந்த நூறு வருடத்திற்கே மீச் சிறு துளி போதுமெனில் இரண்டரை மணி நேர சினிமாவிற்கு இவர் எடுத்துக் கொண்ட கதையின் கருவே போதுமானது. ஆகவே கருவின் வாழ்க்கையினைப் பார்க்க முயற்சியுங்கள் ( திரைக் கதை)பலர் இப்படத்தைப் பற்றி கூறுவது ' பொருள் ஒன்றை வீரட்டிப் பிடிப்பது மட்டும்' - அப்படிப் பார்த்தால் நமது புராண காலத்துக் கதைகளான ராமாயாணமும் மற்ற அனைத்தும் சிறு கருவை மட்டுமே கருவாகக் கொண்ட மாபெரும் காவியங்கள்.அந்த வகையில் இது கூட ஒரு காவியம் எனக் கொள்ளலாம்.அடுத்ததாக ' சம்பந்தம் இல்லாத காட்சி அமைப்புகள் ( படத்தின் தொடக்க காட்சி-12 ஆம் நூற்றாண்டு)' -இதைத் தான் அவர் கதையின் கருவாகக் கொண்டுள்ளார் , அதாவது சாவோஸ் வீதி மற்றும் வண்ணத்துப் பூச்சி வீதி' இதை புரிந்து கொண்டாள் மட்டுமே உங்களால் படத்தின்
பிற்பகுதிக்கும் முற்பகுதிக்கும் தொடர்பு கொள்ள முடியும்ஒரு
தமிழன் இத்துணை முயற்சி மேற்கொண்டு நமது தமிழ்
புகழ் பரப்புகிறான் என்றாள்
முதலில் நாம் அதை பாராட்டியே ஆக வேண்டும்...

ஆக குறை கூறுவதை விடுத்து கலைஞனின் அடுத்த கலைப் படைப்பான
மர்ம யோகியை தரிசனம் செய்ய ஆயத்தமாயிருங்கள்...

கலை மகனின்கலைப் புதல்வனை
கண் கலங்கச் செய்து விடாதீர்கள்...
இங்கனம்கலைஞனின்
சிறுரசிகன்--அன்பன் வினோத்