Tuesday, July 8, 2014

உதிரிக் கவிகள்


என் 'இதழ் பிடித்த' கவி,
என் இதழில் படிந்த கவி,

படிக்கின்ற இதழ்கள்-
பிடித்திட்ட கவி,

பிடித்திட்ட விரல்கள்
பற்றிய கவி,

பற்றிக் கொண்ட
நெஞ்சங்களின் கவி,

நெஞ்சங்களின்
நெஞ்சார்ந்த
மோகங் கொண்ட கவி,

மோகத்தில் தாகம்
தணித்த கவி,

தணிந்தும்
தணியாதிருந்த
கூடல் கொண்ட கவி-எனக்

கவியணைத்தையும் சேர்த்திட்ட,
உதிரிக் கவிகள்...

3 comments:

Coding Tiger said...

Pinra Ma! Good.

திண்டுக்கல் தனபாலன் said...

கவி பிடித்து விட்டது என்னை...!

வினோத் குமார் இராமச்சந்திரன் said...

நன்றி செந்தில் & தனபாலன் அவர்களே