Tuesday, April 12, 2011

மறவாமல் வாக்களியுஙள்



அன்பர்களுக்கு வணக்கம்,

சில நாட்களாக, சதா நேரமும் தேர்தலைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் வாக்களிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை வாக்களிக்காத எவரும் தேர்தல் பற்றியோ அல்லது இதற்குப் பிறகு வரும் ஆட்சியினைப் பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் [தவிர்க்க முடியாத காரணங்களால் ஓட்டுப் போட முடியாதவர்களைத் தவிர]. நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

வாக்களிக்கும் முன் சில நிமிடஙள் யோசிப்பதைவிட, வாக்களிக்கப் போகும் முன்பே முடிவு செய்து கொள்வது நன்று.

மூன்று மாதஙளுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளும் நாம், வரப்போகும் தேர்தலில் நாம் யாருக்கு வோட்டுப் போட வேண்டும் என்பதையும் சிந்தித்து வைத்திருக்க வேண்டும்

இந்த சமயத்தில் 49-O பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ஒரு வாக்காளர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லையென்றால் அவர் 49-O - வில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம். தற்போதைய முறைப்படி

இதற்காக நாம் வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரியிடம் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேன்டும். [ஒருவேளை 49-O - வின் எண்ணிக்கை அதிகமானால் இந்த முறையானது இயந்திரத்துடனே இணைக்க வாய்ப்பு உண்டு].

கடந்த தேர்தலில் எமது நண்பர் "கதிரவன்" அவர்கள் இந்த முறையில் வாக்களித்தார். அவருக்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்கள்.



ஏட்டுச் சுரைக்காய் கரிக்குதவாதது போல,

வாக்களிப்பில்லாதோரின் பேச்சும் - எதற்கும் உதவாது...

நாம் வாக்களிக்கும் நாட்களில் மட்டும் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டே

இருந்தால் - நாம் ஒதுக்கப்பட்டுக் கொண்டேதான் இருப்போம்.

அரசியல்வாதி : ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும்

one of the Swiss bank directors :Indians are poor but INDIA is not a poor country". [அதாவது வாக்களிப்போர்ஏழைகள் வாக்குச் சேகரிப்போர் ---??? சிந்தனை செய் மனமே....]

புதியதோர் உலகம் அமைப்போம்??? - வேண்டாம்...

இருக்கும் பழைய உலகினைச் சுத்தம் செய்வோம்...

மறவாமல் வாக்களியுஙள்...

Monday, April 4, 2011

அமு(ழு)த சுரபி

தாங்கி தாங்கி
தூங்க வைப்போர்
இல்லாமல்,
ஏங்கி ஏங்கி
தூங்கிப்போனமையால்
இரவில் வரு(ழி)கிறது
அமுத சுரபி -
அழுத சுரபியாக...

பார்த்தும் பசி தீரவில்லை

வில்லை வளைத்து - அதன்

குவியின்

குவிப்பால்

குழிந்த - இடையுடையவளே

நாண் ஏற்றிய,

வில்லின்

குவிபோல்

குவிந்த - மார்புடையவளே...

என் மனதைக்

கசக்கும்

கசங்கா

கனியுடையவளே...

இடையாடும்

இடைவெளியில் என்

இதயம் நொறுக்குபவளே...

உன்னைப் பார்க்காவிடில்

கண்கள் பொய்த்துப் போகிறது...

உன்னைப் பார்க்கையில்,

பார்த்துப் பார்த்து,

மெய் மறந்து

மொய்க்கிறதடி...