Monday, July 14, 2014

உயிர் மெய்யின் கற்பனையாய்


புது வரவான,
உறவினை வரவேற்க - பழைய
உறவுகளுக்கெல்லாம்,
தலைமுறை தழைத்ததென,
தகவல் சொல்லி
வந்தோரெல்லாம்,
வயிற்றில் நத்தையினைபோல்,
சுமை கொண்ட உன்
கைகளில் மேலும்
சுமை சேர்த்து - சொல்லாமல்
வந்தவர்கூட சொல்லிக்கொண்டு
செல்ல - சாங்கியமாய் நீ மட்டும்,
சொல்லாது சென்ற அந்த நாள் முதல்,
பசலை நோய்கொண்டு,
தனிமையில் நாம்
தனித்திருந்த நாட்களையெல்லாம் - இன்று
நான் மட்டும் தனித்திருந்து,
நாம்
கூடிக் கழித்த அந் நாட்களையெல்லாம்
கூட்டிக்கழித்து,
எந்நாள் உன்முகம் காண்போம் என்று,
நாட்காட்டி கிழித்துப் பழகி,
முபோழுதும்
உயிர்மை தாங்கிய,
உயிர் மெய்யின் கற்பனையாய் இருக்கிறேன்...

No comments: