Thursday, July 17, 2014

கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை-2

நான்கு நாட்களாக, "Online"-இல் எனது "Account"லிருந்து தவறுதலாக கழிக்கப்பட்ட பணத்தை எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன், இன்னும் வந்தபாடில்லை. எது எதற்கோ கட்டுப்பாடும், விதிமுறைகளும் வரையறுக்கிறார்கள். இந்த மாதிரியான, பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஏன் தெளிவான, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விதிமுறைகளை விதிக்கக்கூடாது. அவர்களுக்கு பணம் செலுத்துவது மட்டும், சில நிமிடங்களில், ஏன் சில நொடிகளில் முடிந்துவிடுகிறது. ஆனால், அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டுவிட்டால், அந்தத் தவறானது அவர்களுடையாதாகவே இருந்தாலும் (உதாரண்மாக "Server" பழுதடைவது) நமக்குத் திருப்பித் தருவதென்றால் பல நாட்கள் இழுத்தடிப்பது.
இதில், நாம் "Online"-இல் பேருந்துக்கு முன் பதிவு செய்யும்போது ஏதேனும் தவறு ஏற்பட்டுவிட்டால் அவ்வளவுதான், நமக்கு வரும் பதில் என்ன தெரியுமா? "இன்னும் 21 பணி நாட்களுக்குள் உங்களது பணம் உங்களது "Account"-இல் திரும்பச் செலுத்தப்படும்" என்பதுதான். அடப்பாவிகளா?, என்னடா இது கொடுமை?

ஒருவேளை, நமது "Account"-இல் இருப்பதே ஒராயிரம்தான் என்கிறபோது, அத்தகைய சூழலில், வேறேதேனும் டிக்கெட்டினை நம்மால் பதிவு செய்ய முடியாமலே போய்விடும் அல்லவா? அந்தக் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒருவேளை நாம் அவர்களைத் தொடர்பு கொண்டால் அதற்கு அவர்கள், "எங்களது பக்கத்தில் இருந்து நாங்கள் உங்களது பணத்தினை திரும்பச் செலுத்துவதற்குத் தேவையானதைச் செய்துவிட்டோம், அது உங்களது "Account'-இல் வருவது உங்களது வங்கியினைப் பொறுத்து" என்பார்கள். அப்படியென்றால், அந்த இடைப்பட்ட நாட்களில் அந்தப் பணமானது எங்கு செல்கிறது. எது எதற்கோ, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள், இதற்கும் தொடர்ந்தால் தகும். இதற்காக ஒரு "" நாம் பதிவு செய்தால் நமக்குத் தகவல் கிடைக்குமா என்பது சந்தேகமே?
"Low Speed Internet"-ல கூட "Ticket book" செய்து விடலாம். ஆனால், நம்முடைய பணத்தை திரும்பப் பெற "High Speed Internet" வச்சிருந்தாலும் முடியாது. :)
இப்பொழுது நாவல் பழம் சீசன் என்பதால், அநேகமாக எல்லாப் பழக் கடைகளிலும் இந்தப் பழங்களைக் காண முடிகிறது. இன்றைய பழங்களைப் பார்த்தால் எதோ அந்த நாவல் பழத்திற்கு "obesity" வந்தது போல இருக்கின்றன. ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு, இரட்டைக் குழல் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் தோட்டவினைப் போலவே தோற்றமளிக்கின்றன. அதிலும் குறிப்பாக எந்தவொரு பழமும் அழுகிய நிலையில் இருப்பதில்லை (எத்தனை நாட்கள் ஆனாலும் இப்படியேதான் இருக்குமோ?) "மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்பதற்குப் பொறுத்தமாக இந்தப் பழங்களைச் சொல்லலாம். ஆமாம் இப்பொழுது வருவெதல்லாம் முற்றிலும் மரபு மாற்றப்பட்ட நாவல் பழங்களே, எனக்கு அதில் என்னென்ன தீமை இருக்கிறது என்றெல்லாம் தெரியாது, ஆனால் கண்டிப்பாக சுவை கிடையாது. இப்படியே இதனை நாம் தொடர்ந்து ஊக்குவித்தால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பெரிய மஞ்சள் வாழைப் பழம் தமிழகத்தில் வேரூன்றிய நிலைதான் இந்தப் பழத்திற்கும் ஏற்படும்.

ஆடி மாதம் ஆரம்பமாகிவிட்டது, அந்தத் தள்ளுபடி, இந்தத் தள்ளுபடியென்று ஆளாளுக்கு விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், உண்மையான தள்ளுபடி எதுவென்று சில-பெரு நிலக் கிழார்களைக் கேட்டால் விளங்கும். வருடா வருடம், ஆடித் தள்ளுபடி வேண்டுமென்றால் பொய்த்துப் போகலாம், ஆனால், விவசாய்க் கடன் தள்ளுபடி மட்டும் பொய்த்துப் போகாது. என்ன செய்வது, உதவி, உண்மையில் தேவைப்படுகின்ற ஒரு விவசாயிக்கு உதவ வேண்டுமென்றால் 10இல் 9 பேருக்கு தாராளம் காட்டித்தான் ஆகவேண்டும். விவசாய நிலங்களுக்கு, மின்சாரம் இலவசமாகக் கிடைக்கின்றது. கிணற்றுத் தண்ணீருக்கு மோட்டார் பொருத்திக் கொள்ள மானியம் கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் இலவசங்களையும், மானியங்களையும் பெற்றுக் கொள்ளும் சில பெரு நிலக் கிழார்கள், அந்தத் தண்ணிரை வயலுக்குப் பாய்ச்சுகிறார்களோ இல்லையோ, அதை விற்றுக் காசாக்கிவிடுகிறார்கள்.

எல்லாம் பண மயமாகிவிட்ட இந்தச் சூழலில், ஏதாவது ஒன்றை நாம் சந்தைப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு மிக முக்கியமானது அதைப் பற்றிய விளம்பரம். அவர்களது நிகழ்ச்சி முதல், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் வரை, எல்லாத்தையுமே விளம்பரம் செய்யும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கும்போதே இப்படித்தான் ஆரம்பிப்பார்கள். "Welcome back to ... Presents.. Co-presented... powered by..." அப்பப்பா தாங்கமுடியல, நிகழ்ச்சிக்கு இடையில் வந்து சென்ற விளம்பரங்களிலிருந்து மாறி, விளம்பரத்திற்காகவே நிகழ்ச்சி என இன்றைய நிலையானது மாறிவிட்டது. "Marketing boss, marketing... Packaging boss packaging..."

சில தொலைக்காட்சிகளில், "Hidden Camera" வைத்துக் கொண்டு பொது மக்களைக் கலாய்த்துக் கொள்வதைப் பதிவு செய்து, பின்னர் அதை "Edit" செய்து மொக்கை வாங்கியவர்கள் எனத் தனித்தனியாக பிரித்து அதற்கெனெ "Music" கொடுத்து ஒளிபரப்புகிறார்கள். எதுவும் அடுத்தவர் மனம் புன்படாதவரைப் பிரச்சனையில்லை. இது தற்போதெல்லாம் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கிறது. உதாரணமாக ஒரு நிகழ்வு " நிகழ்ச்சியில் பங்குபெறும் ஒருவர், வழியில் வரும் ஒருவரிடம், அவர் அவசரமாக "Phone" செய்ய வேண்டுமென்று அவரிடம் "Phone"-ஐப் பெற்றுக் கொண்டு பின்னர் யாருக்கோ "Phone" செய்து அவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார். அவனவன் ஆயிரத்தெட்டு வேலையாகச் செல்லும்போது, அடுத்தவருக்கு உதவவேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் கொடுத்து உதவினால், இது போன்ற மொக்கையர்கள், அவர்களை மொக்கையாக்கினால், பின்னாளில் உண்மையாகவே எவரேனும் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால் அவர் ஒரு கணம் யோசிக்கத்தானே செய்வார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இதைக் கவனத்தில் கொண்டால் தகும். (இதையே அடிப்படையாக வைத்து பார்த்திபன் அவர்கள் "குடைக்குள் மழை" எடுத்தது அனைவரும் அறிந்ததே).

வருடா வருடம் சம்பள உயர்வை எதிர்பார்க்கும் மனது, மற்ற விலைவாசிகளின் விலை உயர்வினை மட்டும் குற்றம் சொல்வது எதனால் என்பது விளங்கவில்லை. விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மா நில அரசுகளின் கடமைதான். ஆனால், இந்த அரசுகளின் கட்டுப்பாடுகளில் இல்லாத, தவிர்க்க முடியாத சில,பல காரணங்களுக்காக விலை உயர்த்தப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ரயில் கட்டணம் உயர்ந்த அதே வேளையில்தான், இரயில்வே ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்ந்திருக்கும், இங்கிருந்து எடுத்து அங்கே கொடுப்பதுதான். "எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவராகிறது". இதுக்குப் பேருதான் போட்டு வாங்குறதோ?.


அது என்னன்னு தெரியல, "Visibility" இந்த வார்த்தை என்னுடைய காதுகளுக்கு எட்டும்போதெல்லாம் எனக்கு கரகாட்டக்காரன் படத்தில் வரும் அந்தக் காட்சிதான் நினைவில் வந்து செல்கிறது.

"....அதுவும் அந்தத் தவில்காரர் காதுல விழுற மாதிரி சொல்லு..." (இப்போ நினைச்சாலும் சிரிப்பு பொத்துக்கிட்டு வருது)

No comments: