அதிகமாக "Dialogue" கிடையாது;
திரும்ப திரும்ப படம் நெடுக வந்த " Dialogue" மறுபடி மறுபடியும் வந்தால்? அநேகமாக எல்லா "Frame"- களிலும் நான்கு- பேர் மட்டுமே வந்தால்?.
பாடல்களே கிடையாது.
இரண்டு அறை, ஒரு திருமண மண்டபம் - இதுதான் படத்தின் "Location" ஆக இருந்தால்?
நடிப்பவர்கள் பதற்றத்துடனும், பயந்து கொண்டும், அழுது கொண்டும் இருப்பார்கள் -- ஆனால் படம் பார்க்கும் நாமோ சிரித்துக் கொண்டு இருப்போம்.
… இப்படி ஒரு படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் நீங்கள் யாராவது போவிர்களா? கண்டிப்பாகப் போக வேண்டும்; அப்படி உங்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டு தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” .
தமிழில் இது போன்ற படங்கள் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டுமென்பதற்காகவே இந்தப் பதிவு...
சமீபத்தில் திரைக்கு வந்த - "நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்", திரைப்படத்தைப் பற்றி எனது பார்வை...
பாடல்(களே) இல்லாமல் வெளிவந்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று. அருமையான படம் - குறிப்பாகத் திரைக்கதை. நானும் படம் முடியும் தருவாயில் - இது ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவலாகத்தான் (Hang over) இருக்கும் என்றெண்ணினேன், ஆனால் இறுதியாக அவர்கள் இது ஒரு உண்மைச் சம்பவம் என்று விளங்க வைத்தபோது அவர்களைக் கண்டிப்பாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
மிக அருமையாக திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்; பெரும்பாலும் படம் முழுக்க "Close-Up" காட்சிகள். அதிலும் குறிப்பாக நான்கு-பேர்தான் படத்தின் முக்கால் பாகம்வரை காட்சியில் இருக்கிறார்கள். இதில் நடித்திருக்கும் நடிகர்கள்கூட மிக அற்புதமாக, எதார்த்தமாக நடித்து இருக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரங்கள் தவிர - ஒரு சில நிமிடக் காட்சிகளில் வரும், "சலூன் கடைப் பையன், 'பக்சி’-யின் நண்பர், நர்சுகள்" எனப் பலரும் நடிப்பில் தூள் கிளப்பிவிட்டார்கள்". ஆகவே இவர்களையெல்லாம் இப்படிக் கனக் கச்சிதமாக இயக்கிய இயக்குனரைப் பாராட்டியே தீர வேண்டும். பிண்ணனி இசையும் மிகப் பரமாதாமக இருந்தது –
மொத்தத்தில் படம் பார்க்கும்போது நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்... பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒரு படம்… வாழ்த்துக்கள் நண்பர்களே
--அன்பன் வினோத்
திரும்ப திரும்ப படம் நெடுக வந்த " Dialogue" மறுபடி மறுபடியும் வந்தால்? அநேகமாக எல்லா "Frame"- களிலும் நான்கு- பேர் மட்டுமே வந்தால்?.
பாடல்களே கிடையாது.
இரண்டு அறை, ஒரு திருமண மண்டபம் - இதுதான் படத்தின் "Location" ஆக இருந்தால்?
நடிப்பவர்கள் பதற்றத்துடனும், பயந்து கொண்டும், அழுது கொண்டும் இருப்பார்கள் -- ஆனால் படம் பார்க்கும் நாமோ சிரித்துக் கொண்டு இருப்போம்.
… இப்படி ஒரு படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் நீங்கள் யாராவது போவிர்களா? கண்டிப்பாகப் போக வேண்டும்; அப்படி உங்களைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டு தற்போது ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” .
தமிழில் இது போன்ற படங்கள் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டுமென்பதற்காகவே இந்தப் பதிவு...
சமீபத்தில் திரைக்கு வந்த - "நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்", திரைப்படத்தைப் பற்றி எனது பார்வை...
பாடல்(களே) இல்லாமல் வெளிவந்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று. அருமையான படம் - குறிப்பாகத் திரைக்கதை. நானும் படம் முடியும் தருவாயில் - இது ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவலாகத்தான் (Hang over) இருக்கும் என்றெண்ணினேன், ஆனால் இறுதியாக அவர்கள் இது ஒரு உண்மைச் சம்பவம் என்று விளங்க வைத்தபோது அவர்களைக் கண்டிப்பாகப் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
மிக அருமையாக திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்; பெரும்பாலும் படம் முழுக்க "Close-Up" காட்சிகள். அதிலும் குறிப்பாக நான்கு-பேர்தான் படத்தின் முக்கால் பாகம்வரை காட்சியில் இருக்கிறார்கள். இதில் நடித்திருக்கும் நடிகர்கள்கூட மிக அற்புதமாக, எதார்த்தமாக நடித்து இருக்கிறார்கள். முக்கிய கதாப்பாத்திரங்கள் தவிர - ஒரு சில நிமிடக் காட்சிகளில் வரும், "சலூன் கடைப் பையன், 'பக்சி’-யின் நண்பர், நர்சுகள்" எனப் பலரும் நடிப்பில் தூள் கிளப்பிவிட்டார்கள்". ஆகவே இவர்களையெல்லாம் இப்படிக் கனக் கச்சிதமாக இயக்கிய இயக்குனரைப் பாராட்டியே தீர வேண்டும். பிண்ணனி இசையும் மிகப் பரமாதாமக இருந்தது –
மொத்தத்தில் படம் பார்க்கும்போது நம்மையும் அந்த இடத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்... பாராட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒரு படம்… வாழ்த்துக்கள் நண்பர்களே
--அன்பன் வினோத்

No comments:
Post a Comment