ஒரு வலை தளத்தில் நான் படித்தது.
அதன் வலை தல முகவரியும்,அதில் குறிப்பிடப்பட்டவையும்...
http://nilavunanban.blogspot.com/2008/06/blog-post_10.html
//
கணிப்பொறி வல்லுனர்கள் என்றால் வார விடுமுறையில் கூத்து கும்மாளமிட்டு திரிபவர்களாக இச்சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் அவர்களை இம்முயற்சியில் ஈடுபடுத்தி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த இதழ் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்
//
இதோ எனது உரை...
மென் பொறியாளர்களைப் பற்றி அவர்கள் குறிப்பிட்டிருந்தது ' இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது '. இந்த வார்த்தை அவர்கள் பயன்படுத்தியதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆயினும் இந்த சமூகத்தில் இருந்து மென் பொறியளர்கள் தனித்துப் பார்க்கப்பட ஆடம்பித்துவிட்டார்கள் என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது.
நானும் ஒரு மென் பொறியாளன் என்பதால் மட்டும் இதை எழுதவில்லை ஒரு தமிழன் என்பதாலும்,தமிழ் கலாச்சாரம் பற்றிய சிந்தனை எனக்குள்ளும் ஓடுவதாலும் இதை எழுதுகிறேன்.
'தமிழ் இலக்கிய சிந்தனை அவர்களுக்கும் உன்டு'...
தலை குனியச் செய்யக் கூடிய வார்த்தைகள்...
அன்பிற்குரிய பண்பாளர்களுக்கு,
உஙளைப் போலவே, தமிழ் எனும் தாயின்
விளை நிளத்தில் விளைந்த எஙகளை மட்டும் ஏன்
தனிமைப் படுத்துகிறீர்கள்?
கூத்திட்டு கும்மாளம் இடுவோர் என சாடுவது எதனால்? எங்கள் கிராமத்தில் எப்படி மண் வாசம் கமழுமோ அதைப் போல எனது நாவிலும் தமிழ் மொழி வீசும்.
இது வரை எனது வாயில் இருந்து தமிழ் மணம் வீசியது உண்டு,ஆங்கில நாற்றம் வீசியது உண்டு, ஆனால் மது,புகை துர்நாற்றம் வீசியது இல்லை.
என்னைப் போன்றோர் பலர் இருக்கையில், இப்படி சாடுவது சரியா?
இப்படிதான் வாழ வேன்டும் என்பது தமிழ் மரபு அதை இம்மியளவும் பிசகாமல் கடை பிடிப்போர் எம்முள் பலர் உன்டு.எனவே இனியும் ஓர் முறை இந்த மாதிரியான பாகு பாடு வேன்டாமே...
நாங்கள் எல்லாம் குழுமையாக(அதி சுகமாக) இருப்பதாக எண்ணுவோர் பல உண்டு...
அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது...
நாங்கள் குழுமையாக இருந்தாலும், நாங்கள் எல்லாம் ஒரு விளை நிலத்தில் மர நிழலில் வளரும் பயிர்களைப் போன்றவர்கள்...
எங்கள் வாழ்வினை தொலைத்துக் கொன்டிருக்கிறோம்,
யாம் வீணாக்கப்படுவது தெரியாமல் ( அதவது எஙளுக்கும் சில பாதிப்புகள்,கடினங்கள் உண்டு )
எனவே இனியும் ஓர் முறை இந்த மாதிரியான பாகு பாடு வேன்டாமே...
இந்த சமயத்தில் நமது வள்ளுவப் பெருந்தகையின் குறள் ஒன்றினைக் குறிப்பிட்டுச் சொல்ல் விரும்புகிறேன்
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
வாழ்க தமிழ்...
வளரட்டும் நல் எண்ணங்கள்...
--அன்பன் வினோத்
No comments:
Post a Comment