
"Alarm" - அணைக்கும் போதெல்லாம்...
தொட தொட மலர்ததென்ன??? - இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது

தூங்கியவனை - எழுப்பியவனைத்
தூங்க வைத்து,
எழுப்பச் செய்கிறேன்...
எழுப்பியவனே தூங்கிப்போ!!!








இன்று நாளிதழ் ஒன்றில் எதேச்சையாக படித்த ஒன்றினை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
‘படிப்பிற்கும் - செய்யும் தொழிலுக்கும்’ முன்பெல்லாம் எப்படிச் சொன்னார்கள் என்றால் "விவசாயி பிள்ளை விவசாயம்தான் செய்ய வேண்டும?" என்றார்கள். அது மாறித்தான் போனது ஆனால் தற்போது அதே நிலையானது சற்றே மேம்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.
இப்போதைய காலகட்டத்தில் என்ன நினைக்கிறார்கள் என்றால் "ஒரு பொறியாளரின் பிள்ளை பொறியாளனாகத்தான் ஆக வேண்டுமென்பது" போல தற்போதைய கால நிலை உள்ளது.
ஒரு நாட்டின் வளர்ச்சியானது அந்த நாட்டின் இளைஙர்களின் கையில்தான் உள்ளது. நமது முன்னாள் குடியரசுத் தலைவர் "படித்தவர்கள் ஒவ்வொருவரும், அடுத்தவர் நிறுவனத்தில் பணிபுரிவதைத் தவிர்த்து, தனியாக தொழில் தொடங்க வேண்டும் [i.e. Entrepreneurship]" சொன்னது போல அனைத்து இளைஞர்களும் சற்றே சிந்தித்துப் பார்த்தால் நன்று.
இதோ அவருடைய எண்ணத்திற்கு வண்ணம் கொடுத்தது போல கீழே காணும் செய்தித் துளிகளைப் படிக்கவும்
பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய சாப்ட்வேர் இன்ஜினியர்கள் நான்கு பேர், கர்நாடகாகிராமத்தில் பால்பண்ணை தொடங்க முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் சாஷிகுமார், ரஞ்சித் முகுந்தன், வெங்கடேஷ் சேஷாசாயி மற்றும் பிரவீன் நலே ஆகிய நான்கு பேர் சாப்ட்வேர்இன்ஜினியர்களாக பணியாற்றினர். கைநிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இவர்களுக்கு கம்ப்யூட்டர்தொழில் அலுத்துவிட்டது. இதனால் வேறு தொழில் செய்வது பற்றி ஆலோசித்தனர். பால்பண்ணைஆரம்பிக்கலாம், நல்ல தொழில் என்ற முடிவுக்கு வந்தனர்.
பால் பண்ணை தொழிலில் ஏற்கனவே அனுபவம் மிக்க ஜி.என்.எஸ். ரெட்டி மற்றும் பிரசன்னா ஆகியோரை சந்தித்துஆலோசனை பெற்றனர். 21 பேரை பங்குதாரர்களாக சேர்த்து "அக்ஷயாகல்ப பார்ம்ஸ் அண்ட் புட்ஸ் லிமிடெட்" என்றபால் பண்ணையை கர்நாடகாவின் ஹசன் மாவட்டம் சன்னாராயபட்டின தாலுகாவில் உள்ள கோடிஹல்லிகிராமத்தில் தொடங்க முடிவு செய்துள்ளனர். 24 ஏக்கர் நிலத்தில் ரூ.15 கோடியில் இந்த பால்பண்ணை அமையஉள்ளது.
நவீன முறையில் பசுக்கள் வளர்ப்பு, மேய்ச்சலை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி மற்றும் சென்சார்கள், இயந்திரங்கள் மூலம் பால் கறப்பது, மாடுகளுக்கு தொடர்ச்சியாக மருத்துவ சோதனை, பால் கறக்கும் அளவைகண்காணித்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படவுள்ளன. கிராம மக்கள் 500 பேருக்கு இவர்களதுபால்பண்ணையில் வேலை கிடைக்கவுள்ளது.
இது தவிர சுற்றுப்புற கிராமங்களில் உள்ள விவசாயிகள் சிறு சிறு பால் பண்ணைகள் நடத்தவும் ஏற்பாடுசெய்துள்ளனர்.
மாடுவாங்க கடன் ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்கள் கறக்கும் பாலை தரகர் இல்லாமல் நேரடியாக கொள்முதல்செய்து விற்கவும் முடிவு செய்துள்ளனர். இது குறித்து சாஷி குமார் கூறுகையில், " வேளாண் துறையில் தொழிலைதொடங்கி` கிராம வேலை வாயப்பு திட்டத்தை அதிகரித்து கிராமங்களை வளம்பெறச் செய்வதே எங்கள் நோக்கம். இதன் மூலம் படித்த வேலையில்லா இளைஞர்கள் விவசாய தொழிலை கைவிட்டு நகரங்களுக்கு செல்வதைதடுக்கலாம்" என்றார்
பி.கு: இது போன்று தொழில் தொடங்க வேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை, என்றேனும் கண்டிப்பாக தொடங்குவேன்.
செய்திகள்: தினகரன் நாளிதழ்


ஏறும்போது வழக்கமாக நான் செல்லவிருக்கும் இடத்தை சொல்லி உறுதி செய்துகொண்டபின்புதான் ஏறுவேன். அன்றும் அவ்வாறுதான் செய்தேன், ஆனால் வழக்கத்திற்கு மாறாக அது செல்லும் கடைசி நிறுத்தத்தின் பெயரைச் சொன்னேன்.
ஏனிந்த பாரபட்சம்???...
இந்த சமயத்தில் எனக்கு நம் மாநிலத்திற்காகச் செய்யவேண்டியவையென்று சில எண்ணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.
1. மிக அதிகமாக பெருகிவிட்ட மதுக்கடைகள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். லாட்டரி சீட்டுக்களைத் தடை செய்த இந்த அரசு, மது விலக்கினை அமுல்படுத்தினால் மிக நன்றாகவே இருக்கும்.
2. அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இடம் ஒதுக்கப்பட வேண்டும், குறிப்பாக சென்னையில்.
3. சாலைகள் செம்மைப்படுத்தப்பட வேண்டும்.
4. மேம்பால ரயில் நிருத்தங்கள் செம்மைப்படுத்தப்பட வேண்டும். சுத்தமாகவும் மக்கள் அமைதியாகவும் பயணம் செய்யும் வகையில் அவை மாற்றப்பட வேண்டும். தற்போதுள்ள நிருத்தங்கள் அச்சுறுத்தும் நிலையிலும் சரியாக பராமரிப்பின்றியும் உள்ளன. இவையெல்லாம் செம்மைப்படுத்தப்பட வேன்டும்.
உதாரணமாக என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
1. ரயில் நிறுத்தத்தின் அடித்தளம் முதல், ரயில் வந்து செல்லும் இடம்வரை கடைகளால் நிரப்ப வேண்டும், இதனால் அரசுக்கும் வருமானம் வரும். இந்தக்
கடைகளைத் தனியாரிடம் கொடுத்தால் இன்னும் செம்மையாக இருக்கலாம், சுத்தமாகவும் இருக்கும்.
2. ஒவ்வொரு நிறுத்தத்திலும் காவல் நிலையங்களை நிறுவலாம், இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பும், மக்களுக்கு பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும்.
3. சுத்தம் செய்வதற்கென்றே தனியாக பணியாளர்களை நியமனம் செய்யலாம், இதுவும் வேலை வாய்ப்பைப் பெருக்கும். இதையும் தனியார்மயம் ஆக்கினால் மிகச் சிறப்பாக இருக்கும்.
4. இதுபோன்ற இடங்களில் நலிவடைந்து வரும் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். உதாரணமாக கைவினைப் பொருள் அங்காடிகளை நிறுவலாம்.
5. போக்குவரத்து வசதிகளை அதிகரிக்க வேண்டும்
6. பேருந்து நிலையஙளை ஆக்கிரமித்து குடியிருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எல்லா பேருந்து நிலையங்களும் பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
"காப்பீட்டுத் திட்டம்" போன்ற மக்களுக்குப் பயன்படும் திட்டங்கள் அனைத்தும், எந்தவொரு காரணத்திற்காகவும் நீக்கப்பட்டுவிடக் கூடாது. மாறாக அவை அனைத்திலும் உள்ள அரசியல் தலைவர்களின் பெயர் நீக்கப்பட்டு வெறும் திட்டங்களின் பெயர்களில் நீட்டிக்கப்பட வேண்டும்.
மின்வெட்டு நிறுத்தப்பட வேண்டும்; சென்னை மட்டுமே தமிழகம் என்ற நிலை மாற வேண்டும். தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்னையில் கிடைக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். [ உதாரணமாக அனைத்து மாநகரஙளிலும் மின்சார ரயில் போக்குவரத்து துவக்கப்பட வேண்டும்.]
கடந்த ஆட்சியில் வரி விலக்கு செய்யப்பட்ட சினிமா தொழிலுக்கு [அதாவது தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்காம்? தமிழ் வளர்ப்பாம்]. இந்த துறையின் மூலம் அதிகமான இழப்பு அரசுக்கு என்பதால், அந்த வரி விலக்கினை உடனடியாக நீக்க வேண்டும், வேண்டுமென்றால் தமிழில் பெயர் வைக்காத திரைப்படங்களுக்கு அதிகமான வரி விதிக்கலாம்.
"பசுமைத் தாயகம் " - என்று பெயரளவில் சொல்லிக்கொள்ளாமல், அதிகமான மரங்கள் நடப்பட வேண்டும், குறிப்பாக சாலை ஓரங்களில்; தற்போதெல்லாம் வெறும் அழகுக்காக மட்டுமே மரங்கள் நடப்படுகின்றன, அதைத் தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு உதவும் விதமாகவும் நமக்கும் ஏற்ற வேம்பு, புளிய மரங்கள் நடப்பட வேண்டும். இதனாலும் வேலை வாய்ப்பு அளிக்கும் வாய்ப்பு உள்ளது, மேலும் அரசுக்கும் இதனால் பண வரத்து அதிகரிக்கும். அதாவது புளிய
மரங்களை ஏலத்திற்கு விடுவதன் மூலமாக அரசு பயனடைய முடியும்.
மாணவர்களுக்கு இலவசமாக தருவதாக கூறி உள்ள "மடிக் கணிணி"களை வழங்காமல், அந்த தொகையில் பள்ளியின் வசதிகளைச் செம்மைப் படுத்திக் கொள்ளலாம். படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் தனித்தனி கணிணிகளைப் பயன்படுத்தும் விதமாக ஆய்வுக்கூடங்களை அமைத்துக் கொடுக்கலாம். அதாவது, அந்த வருட மாணவர்கள் மட்டுமல்லாமல் அடுத்து வருபவர்களும் இதனால் பயனடைய முடியும். மேலும் இதற்கான செலவும் மிக அதிகமாகக் குறையும். ஒருமுறை செலவு செய்தாலே மிக நீண்ட நாட்களுக்கு இவை பயனுள்ளதாக அமையும்.
விவசாயத்திற்காக இலவசமாக மின்சாரம் வழங்குவதை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விலையினை அதிகரிக்கலாம். இதனால் கள்ளச் சந்தையினை ஓரளவு கட்டுப்படுத்த இயலும் என்றெண்ணுகிறென். விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யும் வழக்கத்தை இதோடு நிறுத்திக் கொள்ளலாம். அவ்வாறு தவறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நல்லது என்றெண்ணுகிறேன்.
இலவச மின்சாரம் - இதற்கு ஆகின்ற செலவினை கீழ்க்கண்ட வழிகளில் செலவிடலாம் என்பது எனது எண்ணம்...
1. விவசாயிகளுக்கெனெ ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் பணியிடங்களை நிரப்பலாம். உதாரணமாக "உழவு வண்டி ஓட்டுனர்", "மருந்து தெளிப்போர்" போன்றவற்றிற்கு ஆட்களை நியமித்து அவர்களை இலவசமாக விவசாயிகளுக்கு வேலை செய்து கொடுக்கச் செய்யலாம். இதனால் கிராமத்தில் உள்ளோர் பலர் பயனடைவார்கள்.
2. இயற்கை உரங்கள் பயன்படுத்துவதை அதிகரிக்க அனைத்து உரங்களையும் இலவசமாக வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அவ்வாறாக இயற்கை உரத்தில் விளைவிப்பதற்கு அதிகமான கொள்முதல் விலையினை அரசு வழங்கலாம்.
3. இவ்வாறாக வசதிகள் வழங்குவதால் அரசுக்கு ஏதேனும் இழப்பு ஏற்படும் என்று கருதினால், அவ்வாறாக விளையும் பயிர்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவினை, அரசு இலவசமாக விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
சென்ற ஆட்சியின்போது தலைமீது கொட்டு வைத்து "மழை நீர் சேகரித்தது" போலவே இம்முறையும் அதை நடைமுறைப்படுத்தினால் மிக நன்றாக இருக்கும். [ நாங்கள் புதிதாக கட்டிய வீட்டில் இந்த வசதியினைச் செய்யவில்லை, ஒருவேளை முன்பே இது மிக வழுவாக கட்டாயமாக்கப்பட்டிருந்தால் நாங்கள் நிச்சயமாக செய்திருப்போம் என்றெண்ணுகிறேன்]
அடுத்ததாக "இந்தி" எதிர்ப்பு - நமது தேசிய மொழியான இந்தியினை எதிர்க்காமல் அதைக் கல்வியில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எவரோ? என்றோ? எதற்காகவோ? செய்த எதிர்ப்பை (!!??) நாம் இன்னும் தொடராமல் நம் தேசிய மொழியினை கற்க ஆரம்பிக்க வேண்டும். இதுவும் வேலை வாய்ப்புகளைப் பெருக்கும், "BUDGET" கூட்டத்தொடர்களில் என்ன பேசிகிறார்கள் என்று நம்மால் புரிந்து கொள்வதற்காகவாவது இது பயனடையும்.
"தமிழ், தமிழன்" - என்று இன்னும் வெறுமென மார்தட்டிக்கொண்டு வெட்டியாகப் பேசிக்கொண்டிராமல் அதற்கான உருப்படியான வழிகளில் நம்மை நாமே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒன்று "இட ஒதுக்கீடானது முற்றிலும் நீக்கப்பட வேண்டும்", அனேகமாக இதனை ஒருவரும் ஆதரிக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகக்கூட இருக்கலாம், ஆனால் இவையெல்லாம் என்னுடைய நீண்ட நாள் ஆசைகள்.... இன்னும் நிறைய இருக்கிறது நேரம் கிடைக்கும்போது கிறுக்கிகிறேன்...
இந்த
மாற்றமாவது வழக்கத்திற்கு
மாறாக,
மாற்றம் கொண்டு வருமா??? -
மாறாமல்
ஏமாற்றமே தருமா?...
மாற்றம் - மாற்றம் தருமா?

அன்பர்களுக்கு வணக்கம்,
சில நாட்களாக, சதா நேரமும் தேர்தலைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேர் வாக்களிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை வாக்களிக்காத எவரும் தேர்தல் பற்றியோ அல்லது இதற்குப் பிறகு வரும் ஆட்சியினைப் பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் [தவிர்க்க முடியாத காரணங்களால் ஓட்டுப் போட முடியாதவர்களைத் தவிர]. நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
வாக்களிக்கும் முன் சில நிமிடஙள் யோசிப்பதைவிட, வாக்களிக்கப் போகும் முன்பே முடிவு செய்து கொள்வது நன்று.
“மூன்று மாதஙளுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளும் நாம், வரப்போகும் தேர்தலில் நாம் யாருக்கு வோட்டுப் போட வேண்டும் என்பதையும் சிந்தித்து வைத்திருக்க வேண்டும்”
இந்த சமயத்தில் 49-O பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ஒரு வாக்காளர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லையென்றால் அவர் 49-O - வில் தனது வாக்கைப் பதிவு செய்து கொள்ளலாம். தற்போதைய முறைப்படி
இதற்காக நாம் வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரியிடம் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேன்டும். [ஒருவேளை 49-O - வின் எண்ணிக்கை அதிகமானால் இந்த முறையானது இயந்திரத்துடனே இணைக்க வாய்ப்பு உண்டு].
கடந்த தேர்தலில் எமது நண்பர் "கதிரவன்" அவர்கள் இந்த முறையில் வாக்களித்தார். அவருக்கு மீண்டும் ஒரு முறை எனது வாழ்த்துக்கள்.
ஏட்டுச் சுரைக்காய் கரிக்குதவாதது போல,
வாக்களிப்பில்லாதோரின் பேச்சும் - எதற்கும் உதவாது...
நாம் வாக்களிக்கும் நாட்களில் மட்டும் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டே
இருந்தால் - நாம் ஒதுக்கப்பட்டுக் கொண்டேதான் இருப்போம்.
அரசியல்வாதி : “ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தொடரும் “
one of the Swiss bank directors : “Indians are poor but INDIA is not a poor country". [அதாவது வாக்களிப்போர் – ஏழைகள் வாக்குச் சேகரிப்போர் ---??? சிந்தனை செய் மனமே....]
புதியதோர் உலகம் அமைப்போம்??? - வேண்டாம்...
இருக்கும் பழைய உலகினைச் சுத்தம் செய்வோம்...
மறவாமல் வாக்களியுஙள்...
வில்லை வளைத்து - அதன்
குவியின்
குவிப்பால்
குழிந்த - இடையுடையவளே…
நாண் ஏற்றிய,
வில்லின்
குவிபோல்
குவிந்த - மார்புடையவளே...
என் மனதைக்
கசக்கும்
கசங்கா
கனியுடையவளே...
இடையாடும்
இடைவெளியில் என்
இதயம் நொறுக்குபவளே...
உன்னைப் பார்க்காவிடில்
கண்கள் பொய்த்துப் போகிறது...
உன்னைப் பார்க்கையில்,
பார்த்துப் பார்த்து,
மெய் மறந்து
மொய்க்கிறதடி...
