Saturday, March 5, 2011

அன்றைய சனிக் கிழமைகளில்...


தேங்காய் எண்ணையுடன்
தேவையான அளவு
சீரகம் பூண்டு
சீராய் கலந்து - சூடாக்கி;

இளஞ் சூட்டுடன்,
தலையில்
தட்டி தட்டி
தேய்த்துவிடுவார் -
என் அப்பா,
அன்றைய சனிக் கிழமைகளில்...

தேய்த்து - ஓரிரு
நாழிகை
நன்கு எண்ணையில்
நனைந்த பின்,
சூடான நீரில்
குளியலுண்டு,
அன்றைய சனிக் கிழமைகளில்...

குளித்தபின்,
வெள்ளம் சேர்த்து செய்த
வெந்தயக் களியினில்,
ஓரிரு கரண்டி
அள்ளி வைத்து,
குழிக் கரண்டியின்
குவிப் பகுதியால் - அதை
குழி செய்து,
குழியில் நல்லெண்ணய்
ஊற்றித் தருவார்
என் அன்னை,
அன்றைய சனிக் கிழமைகளில்...

Monday, January 24, 2011

கோணிக் குடை

"பூவும் நாரும்"-போல
"காணியும் கோணியும்"
எங்கள் கிராமத்தில்...

விதை நெல்லும்,
விளவித்த நெல்லும் - இதனுள்;

கோடையென்றால் தரையிலும்,
மழையென்றால்
தலையிலும்,
தவழ்ந்திடும்...

தரை விரிப்பும்
தலைக்
கவசமாகும் - மழைக்
காலத்தில்,
... கோணிப் பை!!!