தமிழ் கூடல்
Monday, January 24, 2011
கோணிக் குடை
"பூவும் நாரும்"-போல
"காணியும் கோணியும்"
எங்கள் கிராமத்தில்...
விதை நெல்லும்,
விளவித்த நெல்லும் - இதனுள்;
கோடையென்றால் தரையிலும்,
மழையென்றால்
தலையிலும்,
தவழ்ந்திடும்...
தரை விரிப்பும்
தலைக்
கவசமாகும் - மழைக்
காலத்தில்,
... கோணிப் பை!!!
Sunday, January 23, 2011
அறுவடை நாள்
எனது நிறுவனத்தில் இருந்து நான் வெளியேறியபோது, எமது நண்பர்களுக்கு நான் அனுப்பிய மடல்...
அன்பர்களுக்கு வணக்கம்,
கல்யாணத்தைப்போலவே
,
இந்த
நிறுவனத்தில்
என்னுடைய
பணிக்காலமும்
ஆயிரம்
காலத்துப்
பயிர்தான்
...
"
பயிர்
என்றாலே
என்றேனும்
அறுவடையும்
உண்டு
"
-
என்பது
போல
,
இந்தப்
பயிருக்கு
இன்று
அறுவடை
நாள்
.
அதிக
விளைச்சல்
இல்லாவிட்டலும்
கூட
,
தரமான
விளைச்சல்
...
விளைந்ததையெல்லாம்
விளைந்த
இடத்தில்
மட்டுமே
விளைவிக்க
வேண்டும்
என்று
எந்த
விதியும் இல்லையாமையால்..
.
இங்கு
விளைந்த
பயிர்களைக்
கொண்டுதான்
நான்
அடுத்து
பயிரிடப்
போகிறேன்
...
விளைச்சல்
என்பது
-
விளைவிப்பவரை
மட்டுமே
சார்ந்தது
அல்ல
...
விதை
நிலத்தையும்
சாரும்
;
விதையினையும்
சாரும்
...
நல்ல விதை கொடுத்தமைக்கு மிக்க நன்றி...
இதுவரை என்னோடு
இயைந்தவர்களுக்கும்;
என்னோடு தங்கள்
எண்ணங்களைப் பங்கிட்ட
எண்ணப் பங்கீட்டாளர்களுக்கும்;
சிறு புன்னகையில்
மட்டுமே, நட்பை
மயிரிழையில் இதுவரை
மடியாது
வைத்திருக்கும்
பண்பாளர்களுக்கும்;
"தட்டினால் திறக்கப்படும்" - போல
"என்னவென்றால்? இன்னவென்று"
ஓரிரு
வாக்கியங்களில், எம்மோடு
பழக்கம் வைத்திருக்கும்
பண்பாளர்களுக்கும்;
ஆயிரம்
வணக்கங்களோடு
விடைபெறுகிறேன் - இங்கிருந்து
வீழ்கிறேன் -விதையாக...
...உஙகள் எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்துக்கள்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)