Wednesday, November 21, 2012

அப்படியென்றால்...


தமிழனாக இருப்பது அடையாளம் -ஆனால்

சாதிகளாகப் பிரிவது அவமானம்.


இதைப் படித்தவுடன் - என் மனதில் ஆயிரம் கேள்விகள். அவை இதோ - இங்கே...






அப்படியென்றால், [சாதிகளாகப் பிரிவது தவறெனில் - மொழிகளாகப் பிரிவதும் ஏன் தவறில்லை]


இந்தியனாக இருப்பது அடையாளம் -ஆனால்

மொழிகளாகப் பிரிவது அவமானம். [இது சரியாகத்தானே இருக்கும்]



அப்படியென்றால் [மொழிகளாகப் பிரிவது தவறெனில் - நாடுகளாகப் பிரிவதும் ஏன் தவறில்லை]


பிரபஞ்சம் என்பது நம் அடையாளம் -ஆனால்
நாடுகளாகப் பிரிவது அவமானம். [இது சரியாகத்தானே இருக்கும்]


என்னைப் பொறுத்தவரை...
மனிதம் என்பது நம் அடையாளம் - மனித உணர்விலிருந்து பிரிவது அவமானம்

Monday, April 9, 2012

என்ன கொடுமை இது???

‎6am to 9am12pm to 3pm6pm to 6.45pm7.30pm to 8.15pm9pm to 9.45pm... 10.30pm to 11.15pm12am to 12.45am1.15am to 2am2.30 am to 3.15am4.45 am to 5.30 amவரவு எட்டணா - செலவு பத்தணா....மின்சாரம் இருக்கும் நேரத்தைவிட இல்லாத நேரமே மிக அதிகமாக் இருக்கிறது.எங்கள் ஊரில் தற்போது இருக்கும் மின்வெட்டு நேரம் இது... எங்கள் ஊரும் தமிழகத்தில்தான் இருகிறது. எங்களுக்கு மட்டுன் ஏன் இந்த பாரபட்சம்? அது என்ன சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு. நாங்கள் என்ன ஒதுக்கப்பட்டவர்களா? அப்படியென்றால் எங்களிடம் ஏன் வரி வசூலிக்க வேண்டும்?சென்னைக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று என் நண்பர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது "சென்னை ஒரு தொழில் நகரமாம்". அப்படியென்றால் எங்கள் பகுதி மக்கள் எல்லாம் பிச்சையா எடுக்கிறர்கள்? ஏதோ ஒரு நாட்டில் தமிழ் பேசுபவர்கள் பாத்திக்கப்படுகிறார்கள் என்று போராட்டத்தில் குதிக்கும் பலர் - நம் தமிழகத்தில் எங்களுக்கு இழைக்கப்படும்/மறுக்கப்படும் சம உரிமையினைப் பற்றி ஏன் பேசுவதில்லை?எல்லாவற்றிலும் உள்ள இட ஒதுக்கீடு போல மின்சரம் வழங்குவதிலும் ஒதுக்கிவிட்டார்கள்போலும்... என்ன கொடுமை இது???