Monday, April 9, 2012

என்ன கொடுமை இது???

‎6am to 9am12pm to 3pm6pm to 6.45pm7.30pm to 8.15pm9pm to 9.45pm... 10.30pm to 11.15pm12am to 12.45am1.15am to 2am2.30 am to 3.15am4.45 am to 5.30 amவரவு எட்டணா - செலவு பத்தணா....மின்சாரம் இருக்கும் நேரத்தைவிட இல்லாத நேரமே மிக அதிகமாக் இருக்கிறது.எங்கள் ஊரில் தற்போது இருக்கும் மின்வெட்டு நேரம் இது... எங்கள் ஊரும் தமிழகத்தில்தான் இருகிறது. எங்களுக்கு மட்டுன் ஏன் இந்த பாரபட்சம்? அது என்ன சென்னைக்கு மட்டும் இரண்டு மணி நேரம் மின்வெட்டு. நாங்கள் என்ன ஒதுக்கப்பட்டவர்களா? அப்படியென்றால் எங்களிடம் ஏன் வரி வசூலிக்க வேண்டும்?சென்னைக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என்று என் நண்பர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது "சென்னை ஒரு தொழில் நகரமாம்". அப்படியென்றால் எங்கள் பகுதி மக்கள் எல்லாம் பிச்சையா எடுக்கிறர்கள்? ஏதோ ஒரு நாட்டில் தமிழ் பேசுபவர்கள் பாத்திக்கப்படுகிறார்கள் என்று போராட்டத்தில் குதிக்கும் பலர் - நம் தமிழகத்தில் எங்களுக்கு இழைக்கப்படும்/மறுக்கப்படும் சம உரிமையினைப் பற்றி ஏன் பேசுவதில்லை?எல்லாவற்றிலும் உள்ள இட ஒதுக்கீடு போல மின்சரம் வழங்குவதிலும் ஒதுக்கிவிட்டார்கள்போலும்... என்ன கொடுமை இது???

Tuesday, March 13, 2012

தொழில் நுட்பம்

அனபர்களுக்கு வணக்கம்,

சமீபத்தில் "அம்புலி" படம் பார்த்தேன். தொழில் நுட்பத்தில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதைக் கண்கூடாகக் காண முடிந்தது. அருமையான 3D பதிவுகள். அந்தப் படத்தின்போது இடைவேளையின்போது "கர்ணன்" படத்தின் "Trailer" ஒளிபரப்பினார்கள். அப்போது எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த எண்ணத்தை எண்ணிப்பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது... இப்படிப்பட்ட தொழில் நுட்பங்கள் இருக்கும் போது நாம் ஏன் நம்முடைய புராண இதிகாசங்களைப் படமாக மீண்டும் உருவாக்கக் கூடாது?




"Horry Potter" போன்ற கர்ப்பனைக் கதாப்பாத்திங்கள் கொண்ட படங்களை நாம் விரும்பிப் பார்க்கும்போது, நவீன தொழில் நுட்பம் கொண்டு நம் இதிகசங்களை "Troy" போலவும், "Harry Potter" போலவும் நாம் ஏன் எடுக்கக் கூடாது?

இன்னும் நாம் அந்த முயற்சியினை எடுக்காவிட்டால் - வெளி நாட்டவர் எடுத்து நாம் பார்க்க நேரிடும். அப்போது, அதில் சில தவறாகவும் படலாம். அப்போது அந்தப் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் கூட நடத்த நேரிடலாம். நமக்குள் உள்ள நல்லவற்றை வைத்துக் கொண்டு இந்த உலகை ஏன் நம்மால் திரும்பிப் பார்க்க வைக்க இயலாது?