தமிழ் கூடல்
Tuesday, July 21, 2009
உதிர்க்காமல் உதிர்த்துவிடு
வற்றாத என் ஆசைகளை
சிற்றோடை போல
கலகலவென நான் அள்ளிக் கொட்ட
... நீயோ
சிற்றோடை சேர்ந்த
மடை போல,
சலனமின்றி இருந்து
என்னைச் சலனப்படுத்துகிறாய்...
என்றும் அன்பாய்
என்மேல் உதிர்பவனே,
ஒருபோதும்
கோவமாய் வார்தைகளை
"உதிர்க்காமல் உதிர்த்துவிடு"
அன்பாய்...
Tuesday, March 17, 2009
மடை வெள்ளத்தினும் பெரிய துளி
மடை திறந்த
வெள்ளத்தை விட
வேகம் அதிகம் உண்டு...
ஊடல் முடிந்து
கூடல் தொடரும் போது,
காதலன் நெஞ்சில் சாய்ந்து அழும்
காதலியின் கண்ணீர் துளி-க்கு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)