Tuesday, July 21, 2009

உதிர்க்காமல் உதிர்த்துவிடு

வற்றாத என் ஆசைகளை
சிற்றோடை போல
கலகலவென நான் அள்ளிக் கொட்ட
... நீயோ
சிற்றோடை சேர்ந்த
மடை போல,
சலனமின்றி இருந்து
என்னைச் சலனப்படுத்துகிறாய்...
என்றும் அன்பாய்
என்மேல் உதிர்பவனே,
ஒருபோதும்
கோவமாய் வார்தைகளை
"உதிர்க்காமல் உதிர்த்துவிடு"
அன்பாய்...

Tuesday, March 17, 2009

மடை வெள்ளத்தினும் பெரிய துளி

மடை திறந்த
வெள்ளத்தை விட
வேகம் அதிகம் உண்டு...
ஊடல் முடிந்து
கூடல் தொடரும் போது,
காதலன் நெஞ்சில் சாய்ந்து அழும்
காதலியின் கண்ணீர் துளி-க்கு