Tuesday, March 17, 2009

மடை வெள்ளத்தினும் பெரிய துளி

மடை திறந்த
வெள்ளத்தை விட
வேகம் அதிகம் உண்டு...
ஊடல் முடிந்து
கூடல் தொடரும் போது,
காதலன் நெஞ்சில் சாய்ந்து அழும்
காதலியின் கண்ணீர் துளி-க்கு

Wednesday, December 31, 2008

புத்தாண்டு நல்வாழ்துக்கள்

எழுதி முடிக்கப்படாத,
தான் எழுதிடா,
'வ்ரலாறு' எனும் சுயசரிதையினைக்
கொண்டவன்...

"வாழையடி வாழையாய்"
என்பதற்கு உவமை
நாயகன்...

வருடந்தோறும் செத்துப்
பிழைக்கும் இந்தப்
புத்தாண்டில்...

நம் இன்னல்கள் செத்து
நம் மகிழ்ச்சிகள் பிழைத்திட...

நம்
நினைவுச் சுவடுகளில்
வரவாய் மகிழ்ச்சியும்
செலவாய் துக்கங்களும்
இருந்திட...

இவ்வருடம்
சோகங்கள் எவையும்
சோபித்திடாது,
மகிழ்ச்சி
மட்டும் மலர்ந்திட
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

-- இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்--